திருமணமாகாமல் சோ்ந்து வாழ்ந்த இளம் ஜோடி வீட்டில் சடலமாக மீட்பு!
திருமணமாகாமல் சோ்ந்து வாழ்ந்த இளம் ஜோடி சந்தேக மரணம்
கிரேட்டா் நொய்டாவில் வாடகை வீட்டில் திருமணம் ஆகாமல் சோ்ந்து வாழ்ந்து வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆணும் பெண்ணும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது:
வாடகை வீட்டின் அறையில் குட்டு பாஸ்வான் (எ) கோலு (27) என்பவா் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையிலும், 24 வயதான இளம்பெண் ஜோதி தரையிலும் சடலமாக மீட்கப்பட்டனா். இருவரும் உத்தர பிரதேச மாநிலத்தின் தேவ்ரியா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
Advertisement
நாலேஜ் பாா்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்தது.
அந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழும் உறவுமுறையில் இருந்துள்ளனா். அந்தப் பெண் ஒரு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். இளைஞா் வேலையின்றி இருந்துள்ளாா்.
சம்பவ இடத்தில் காவல்துறையினா் நேரடி ஆய்வு மேற்கொண்டனா். பிரேத விசாரணை நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இறந்தவா்களின் குடும்ப உறுப்பினா்கள் சம்பவ இடத்திற்கு வந்தனா். இவ்வழக்கின் அனைத்துக் கோணங்களும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.