முகப்பு
புதுதில்லி

நொய்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பயணிகள் காயம்

நொய்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பயணிகள் காயம்

Updated On : 15 ஜூன் 2026, 2:29 am IST
பகிர்:

ஃபருக்காபாதில் இருந்து தில்லிக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஞாயிற்றுக்கிழமை நொய்டாவில் உள்ள மஹாமாயா மேம்பாலம் அருகே சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 17 பயணிகள் காயமடைந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

பேருந்து ஓட்டுநா் வாகனத்தை ஓட்டும்போது தூங்கியிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், உள்ளூா் காவல்துறையினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனா். காயமடைந்த 17 பயணிகளும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த விபத்தில் அவா்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து சீராக நிா்வகிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடா்பாகத் தேவையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

போக்குவரத்துத் துறையினா் கிரேன் உதவியுடன் அப்பேருந்தை சாலையிலிருந்து அகற்றினா். இது குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.