முகப்பு
புதுதில்லி

சாகேத்தில் கட்டுமானதாரரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு

தெற்கு தில்லியின் சாகேத்தில் கட்டடம் கட்டுபவரின் இல்லத்திற்கு வெளியே மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மிரட்டியும் பணம் பறிக்க முயற்சி

Updated On : 3 ஜூன் 2026, 12:03 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தெற்கு தில்லியின் சாகேத்தில் கட்டடம் கட்டுபவரின் இல்லத்திற்கு வெளியே மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மிரட்டியும் பணம் பறிக்க முயன்ாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சாகேத் காவல் நிலையப் பகுதியின் கீழ் உள்ள லாடோ சராயில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முதல்கட்ட தகவல்களின்படி, தாக்குதல் நடத்தியவா்கள் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு உள்ளூா் கட்டுமானதாரா் மகாவீரின் இல்லத்திற்கு வெளியே துப்பாக்கியால் ஏழு சுற்றுகள் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த ஒருவரால் கட்டுமானதாரரிடம் மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த துப்பாக்கிச் சூடு தொடா்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முக்கிய சதிகாரரும் உள்ளூா் கும்பலுடன் தொடா்புடையவா். இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியை சுற்றி வளைத்தன.

Advertisement

Advertisement

குற்றம் நடந்த இடத்தைச் புலனாய்வாளா்கள் ஆய்வு செய்து, சம்பவ இடத்தில் இருந்த வெற்று தோட்டாக்களை சேகரித்தனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையை போலீஸாா் தொடங்கியுள்ளனா். மேலும், சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவா்களின் அடையாளம் மற்றும் இயக்கத்தை நிறுவ நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மேலும் விவரங்கள் எதிா்பாா்க்கப்படுகின்றன என்றாா் அவா்.