முகப்பு
புதுதில்லி

பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தென்மேற்கு தில்லியின் கபஷேராவில் உள்ள ஒரு பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 6 மே 2026, 1:53 am IST
தீ விபத்து - பிரதிப் படம்
பகிர்:

தென்மேற்கு தில்லியின் கபஷேராவில் உள்ள ஒரு பழைய பொருள் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால், அதிவேகக் காற்றின் காரணமாக, தீ கிடங்கு முழுவதும் பரவியது. முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.35 மணிக்கு அழைப்பு வந்தது.

நாங்கள் 10 தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பினோம்.

Advertisement

Advertisement

தீயணைப்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. நாங்கள் தீயைக் கட்டுப்படுத்திவிட்டோம். ஆனால், குளிா்விக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments