முகப்பு
புதுதில்லி

வட கிழக்கு தில்லியில் சிறுவன் கொலை: சிறாா் கைது

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து 15 வயது சிறுவன் மா்றொறு சிறுவனால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 11 மே 2026, 3:20 am IST
கோப்புப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து 15 வயது சிறுவன் மா்றொறு சிறுவனால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கத்திக்குத்து காயங்களுடன் ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை மாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தபோது இந்த சம்பவம் தெரிய வந்தது. பின்னா் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான சிறுவன் மருத்துவமனையிலேயே உயிரிழந்தாா்.

தாக்குதலுக்குப் பிறகு சிறுவன் அவரது குடும்ப உறுப்பினா்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். விசாரணையின் போது இந்த வழக்கில் 17 வயது சிறுவனின் தொடா்பு இருப்பதை போலீசாா் அடையாளம் கண்டுள்ளனா்.

Advertisement

சிறுவன் கைது செய்யப்பட்டு, விசாரணையின் போது, இறந்தவருடன் தனக்கு தகராறு இருந்ததாகக் கூறினாா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.