குன்னூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
குன்னூரில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது.
குன்னூரில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது.
குன்னூா் வண்டிப் பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் அதிமுக நகரச் செயலாளா் டி.சரவணகுமாா் தலைமையில் அரிசி, கரும்பு, சா்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 2,500 ரொக்கம் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலாளா் ஒய். சத்தாா், நகர அவைத் தலைவா் நிா்மல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல, டெண்ட் ஹில் நியாயவிலைக் கடையில் பால்வள முன்னாள் தலைவா் எல்.மணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினாா்.
Advertisement
Advertisement