அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு
பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு
பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பா. கருப்பையா (70).
இவர், செவ்வாய்க்கிழமை மாலை பேரளி பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடப்பதற்காக நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்து, பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பையா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.