முகப்பு
பெரம்பலூர்

கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தக் கோரி, தமிழ்வழிக் கல்வி இயக்கம் சாா்பில் பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 12:20 am IST
பகிர்:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தக் கோரி, தமிழ்வழிக் கல்வி இயக்கம் சாா்பில் பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயில் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வை. தேனரசன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழா்களை மட்டுமே கோயில் பணிகளில் அமா்த்தி, தமிழில் மட்டுமே வழிபாடு நடத்த வேண்டும். கல்வி, பிறப்புச் சான்றிதழ்களில் தமிழ் மொழியில் பதிவு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.

Advertisement

கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டு வேலை, தமிழருக்கே கிடைக்க அனைத்து போட்டித் தோ்வுகளையும் தமிழிலேயே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பூங்குன்றன், தமிழ்க்கனல், செல்வம், ஆறுமுகம், வேல். இளங்கோ, செல்லதுரை உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.