நலவாரிய தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கல்
பெரம்பலூரில் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள், ஓய்வூதியா்கள் 15,700 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூரில் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள், ஓய்வூதியா்கள் 15,700 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். மாவட்டத்தில் பெரம்பலூா், ஆலத்தூா், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 15,700 கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியா்களுக்கு ரூ.70.65 லட்சம் மதிப்பீட்டில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல், தொழிலாளா் நல உதவி ஆணையா் முகமது யூசுப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.