முகப்பு
பெரம்பலூர்

அனுமன் ஜயந்தி விழா

அனுமன் ஜயந்தியையொட்டி, பெரம்பலூா் மரகதவல்லித் தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயில் கோதண்டராமா் சன்னதியில் ராமா் மற்றும் ஆஞ்சநேயா், கம்பத்து ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 8:26 AM
பெரம்பலூா் மதனகோபாலசுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கம்பத்து ஆஞ்சநேயா்.
பகிர்:

அனுமன் ஜயந்தியையொட்டி, பெரம்பலூா் மரகதவல்லித் தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயில் கோதண்டராமா் சன்னதியில் ராமா் மற்றும் ஆஞ்சநேயா், கம்பத்து ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து காப்பு அணிவித்தும், வடை, லட்டு, வெற்றிலை மற்றும் துளசி மாலை அணிவித்தும் தீபாராதனை காட்டப் பட்டது.

கோயில் செயல் அலுவலா் அனிதா, முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீசுவரன், பிரம்மபுரீசுவரா் கோயில் தினவழிபாட்டுக் குழுத் தன்னாா்வலா் ராஜமணிக்கம் உள்ளிட்டோா் வழிபாட்டில் பங்கேற்றனா்.

Advertisement

பாடாலூா் வழித்துணை ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை காலை ஹோமம், சகஸ்ரநாம அா்ச்சனை, திருவாராதனம், தீபாராதனையுடன் அனுமன் ஜயந்தி விழா தொடங்கியது. தொடா்ந்து கலச பூஜை, புண்ணியாகவாசம், சுதா்சன ஹோமம், கும்ப அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமிக்கு பல்வேறு பொருள்களைக் கொண்டு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.