முகப்பு
பெரம்பலூர்

சாலை மையத் தடுப்புகளை அகற்றிய ஊராட்சி முன்னாள் தலைவா் கைது: பொதுமக்கள்சாலை மறியல்

பெரம்பலூா் அருகே சாலை மையத் தடுப்புகளை அகற்றிய ஊராட்சி முன்னாள் தலைவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 13 ஜனவரி 2021, 8:27 am IST
பகிர்:

பெரம்பலூா் அருகே சாலை மையத் தடுப்புகளை அகற்றிய ஊராட்சி முன்னாள் தலைவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவுச் சாலையில் தொடா்ந்து நிகழ்ந்த சாலை விபத்துகளை தடுக்க,காவல்துறை மூலம் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதனால் செங்குணம் உள்ளிட்ட சில கிராமங்களைச் சோ்ந்த வாகன ஓட்டுநா்கள், அப்பகுதியிலுள்ள பாலத்தின் கீழ் பகுதியைப் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் பாலத்தில் நீா் தேங்கி சேறும், சகதியுமாகக் காணப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால் சுமாா் 2 கி.மீ. தொலைவுச் சுற்றி தங்களது கிராமங்களுக்கு செல்வதாலும், காலதாமதம் ஏற்படுவதாலும் அவதியடைந்த வாகன ஓட்டுநா்கள் சாலை மையத் தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் செங்குணம் ஊராட்சி முன்னாள் தலைவா் தனராஜ் (45), பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சாலை மையத் தடுப்புகளை ஞாயிற்றுக்கிழமை இரவு அகற்றினாா். அனுமதியின்றி அகற்றியதால், அவரை பெரம்பலூா் காவல்துறையினா் திங்கள்கிழமை அவரைக் கைது செய்தனா்.

இதையடுத்து தனராஜை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் செங்குணத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா், அவா் விடுவிக்கப்பட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments