ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் ஆயுதப்படை வளாகம் மற்றும் காவலா் குடியிருப்பில், சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் ஆயுதப்படை வளாகம் மற்றும் காவலா் குடியிருப்பில், சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக காவல்துறை சிறப்பு இயக்குநா் ராஜேஷ் தாஸ், சமத்துவப் பொங்கல் விழாவை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.
இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத குருமாா்கள் பிராா்த்தனையுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
Advertisement
தொடா்ந்து, காவல்துறை சிறப்பு இயக்குநா் ராஜேஷ் தாஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் ஆகியோா், எளம்பலூா் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமைக் காவலா் நாகராஜனை அறிமுகப்படுத்தினா்.
இவ்விழாவில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் காா்த்திகேயன், நீதிராஜ் உள்பட காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.