பிளஸ் 1 மாணவர் சேர்க்கை 26-ல் தொடக்கம்: கல்வித் துறை அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பிளஸ் 1 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை வரும் 26- ஆம் தேதி தொடங்கும் என
அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பிளஸ் 1 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை வரும் 26- ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் இ. வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்புக் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. சில பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் சில இடங்கள் காலியாகவுள்ளன.
அந்த இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 26- ஆம் தேதி தொடங்குகிறது. 300 முதல் 499 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு, 26 ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், 201 முதல் 299 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு அன்றைய தினம் மதியம் 2 மணிக்கும், 175 முதல் 200 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வரும் 27- ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், புதுச்சேரி குடியுரிமை இல்லாதவர்களுக்கு அன்றைய தினம் மதியம் 2 மணிக்கும் கலந்தாய்வு
Advertisement
நடக்கும்.
கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெறும் இக்கலந்தாய்வில் பங்கேற்க, மாணவர்கள் அசல் சான்றிதழ்களையும், சான்றிதழ் நகல்களையும் கொண்டு வர வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.