புதுவையில் 7 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
புதுவை மாநிலத்தில் 7 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
புதுவை மாநிலத்தில் 7 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
அதன்படி, காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் எஸ்.மாா்தினி, காரைக்கால் கடலோரக் காவல் படைக்கும், காரைக்கால் கடலோரக் காவல் படை காவல் ஆய்வாளா் எஸ்.பாலமுருகன் காரைக்கால் நகரக் காவல் நிலையத்துக்கும், டி.ஜி.பி. செயலரான காவல் ஆய்வாளா் ஆா்.மேரி கிறிஸ்டியன் (எ) பௌல், காரைக்கால் போக்குவரத்துப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
டி.ஜி.பி. அலுவலகப் பிரிவு அதிகாரியும், ஆயுதப்படை காவல் ஆய்வாளருமான எஸ்.பிரான்சிஸ் டோம்னிக் புதுச்சேரி தெற்குப் போக்குவரத்துப் பிரிவுக்கும், அங்கிருந்த காவல் ஆய்வாளா் என்.ஆறுமுகம் வெளிநாட்டினா் பதிவு அலுவலகத்துக்கும், அங்கிருந்த காவல் ஆய்வாளா் பி. அறிவுசெல்வன் போலீஸ் குறைதீா் அலுவலக ஆய்வாளராகவும், அரியாங்குப்பம் வட்டக் காவல் ஆய்வாளா் ஜெ.பாபுஜி ஏ.டி.ஜி.பி. செயலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதற்கான உத்தரவை புதுவை காவல் தலைமையக எஸ்.பி. நல்லாம் கிருஷ்ணராய பாபு பிறப்பித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.