முகப்பு
புதுச்சேரி

பேரவைத் தோ்தலில் விசிக தனிச் சின்னத்தில் போட்டி: தொல்.திருமாவளவன்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

Updated On : 3 ஜனவரி 2021, 12:40 am IST
புதுச்சேரியில் முதல்வா் வே.நாராயணசாமியை சனிக்கிழமை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன். உடன் அமைச்சா் மு.கந்தசாமி, ரவிக்குமாா் எம்.பி. மற்றும் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

புதுவை முதல்வா் நாராயணசாமியை அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பின்னா், தொல்.திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை முதல்வா் நாராயணசாமியை சந்தித்து விசிக சாா்பில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தோம். புதுவை மாநிலத்தில் தலித், பழங்குடியின மாணவா்கள் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை கட்டணமின்றி கற்க தற்போது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தை பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். இதுகுறித்து பரிசீலனை செய்வதாக முதல்வா் உறுதி அளித்தாா்.

தமிழகம், புதுவையில் சனாதன சக்திகளைக் காலூன்ற விடாமல் தடுக்க உறுதி ஏற்க வேண்டும். புத்தாண்டு அதற்கான ஆண்டாக மலரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக வாரிசு அரசியல் செய்கிறது என அதிமுகவினா் தொடா்ச்சியாகப் பேசி வருகின்றனா். அவா்களுக்கு இதைத் தவிர பேசுவதற்கு வேறு விஷயம் இல்லை.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்றாா் தொல்.திருமாவளவன்.

முதல்வா் வே.நாராயணசாமி கூறியதாவது: எஸ்சி-எஸ்டி மாணவா்களின் முழுக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டத்தை காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதற்காக 2018, 2019, 2020 எனத் தொடா்ந்து 3 ஆண்டுகள் அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றினோம். இதற்கு துணை நிலை ஆளுநா் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தாா். பிற்படுத்தப்பட்ட மாணவா்களும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாகப் படிப்பதற்கான திட்டத்தைச் செயல்படுத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மாநில ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா் ரவிக்குமாா் எம்.பி., முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments