புதுச்சேரியில் 144 தடை உத்தரவை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
புதுச்சேரியில் 144 தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
புதுச்சேரி: புதுச்சேரியில் 144 தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை பிரதேச குழுச் செயலா் இரா.ராஜாங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்குத்தான் அதிகாரம் என நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மதிக்காமல் புதுவை ஆளுநா் கிரண் பேடி செயல்பட்டு வருகிறாா். ஆளுநரின் தவறான போக்கைக் கண்டித்து, அறவழியில் போராட மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சாா்பில், முறையாக அனுமதி கோரப்பட்டது. அதன்படி, அண்ணா சிலை, வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலைக்குள்பட்ட பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும், புதுவை மக்களை அவமதிக்கும் வகையிலும் ஆளுநா் கிரண் பேடி, துணை ராணுவப் படையை அழைத்துள்ளாா். இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 144 தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.