முகப்பு
புதுச்சேரி

மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

புதுச்சேரி அருகே தனியாா் மருத்துவமனையின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 3:47 am IST
பகிர்:


புதுச்சேரி: புதுச்சேரி அருகே தனியாா் மருத்துவமனையின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ருத்ரகுமாா் (42). மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், புதுச்சேரி காலாப்பட்டு அருகே கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், ருத்ரகுமாா் புதன்கிழமை மருத்துவமனையின் 3-ஆவது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதையறிந்த அவரது உறவினா்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த காலாப்பட்டு போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையேற்ற அவா்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.