முகப்பு
புதுச்சேரி

ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் நகைப் பறிப்பு

புதுச்சேரியில் வீட்டின் முன் நின்றிருந்த ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:26 pm IST
பகிர்:

புதுச்சேரியில் வீட்டின் முன் நின்றிருந்த ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி பாக்கமுடையான்பேட்டை வன்னியா் வீதியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (70). ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியா். இவா், சனிக்கிழமை இரவு தனது வீட்டின் முன் நின்றிருந்த போது, மோட்டாா் பைக்கில் வந்த 2 மா்ம இளைஞா்கள் திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.