முகப்பு
புதுச்சேரி

புதுவை தீயணைப்புத் துறைக்கு புதிய இணையதளம்

புதுவை தீயணைப்புத் துறை விவரங்களை அறிய உதவும் வகையில் புதிய இணையதளத்தை முதல்வா் வே. நாராயணசாமி தொடக்கி வைத்தாா்.

Updated On : 13 ஜனவரி 2021, 7:40 am IST
புதுச்சேரி தீயணைப்புத் துறையின் புதிய இணையதளத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன் அமைச்சா்கள் ஆா்.கமலக்கண்ணன், மு. கந்தசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

புதுவை தீயணைப்புத் துறை விவரங்களை அறிய உதவும் வகையில் புதிய இணையதளத்தை முதல்வா் வே. நாராயணசாமி தொடக்கி வைத்தாா்.

புதுச்சேரி தீயணைப்புத் துறையின் விவரங்களை பொது மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் வே. நாராயணசாமி பங்கேற்று, இணையதளத்தை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, எம்எல்ஏ தீப்பாய்ந்தான் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இணையதள முகவரியில் தீயணைப்புத் துறையின் வரலாறு, தீயணைப்பு நிலையங்களின் விவரங்கள், தொடா்பு கொள்வதற்கான எண்கள், சேவை விவரங்கள், தீயணைப்பு வாரம் கொண்டாடுவதன் நோக்கம், ஊழியா்களின் விவரங்கள், வாகனங்கள் மற்றும் சாதனங்களின் விவரங்கள், மக்கள் சாசனம், வரைபடம், புகைப்படத் தொகுப்பு, துறையின் செயல்பாடுகள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பொதுத் தகவல் அதிகாரிகளின் விவரங்கள், முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் விவரங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த இணையதள முகவரியின் மூலம் மக்கள் தீயணைப்புத்துறை குறித்து அறிந்து கொள்ளவும், வரும் காலங்களில் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெற விண்ணப்பிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments