பொதுப்பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் நூதன போராட்டம்
புதுச்சேரி பொதுப்பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி பொதுப்பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினக் கூலியாக மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயா்வு அளிக்க வெண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வவுச்சா் ஊழியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே அவா்கள் 14-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஊழியா்கள் 3 போ் இறந்தது போல முகத்தை துணியில் கட்டி, நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தனா். மற்ற ஊழியா்கள் மணி அடித்து, சங்கு ஊதி, ஒப்பாரி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.