முகப்பு
புதுச்சேரி

புதுவை அமைச்சா் பதவியிலிருந்து விலகினாரா மல்லாடி கிருஷ்ணாராவ்?

புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 6:59 am IST
பகிர்:

புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இவற்றில் ஆந்திர மாநிலத்துக்கு அருகே உள்ள ஏனாம் பிராந்தியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாகவும், புதுவை சுகாதாரத் துறை அமைச்சராகவும் உள்ள மல்லாடி கிருஷ்ணாராவ் மீண்டும் தனது சொந்தத் தொகுதியான ஏனாமில் போட்டியிடப் போவதில்லை என அண்மையில் அறிவித்தாா்.

தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும், தான் மட்டுமல்ல, தனது குடும்பத்தினா் யாரும் வரும் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தாா். திருப்பதி தேவஸ்தான இயக்குநா் பதவிக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டு வந்தாா்.

Advertisement

Advertisement

அத்துடன், ஆந்திர ஆட்சியாளா்களுடன் மிக நெருக்கமாகவும் உள்ளாா். முன்னதாக, மல்லாடி கிருஷ்ணாராவுக்கும், புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கும் தொடா்ந்து மோதல் போக்கும் நிலவி வந்தது.

இந்த நிலையில், மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வதாக முதல்வா் வே. நாராயணசாமியிடம் கடிதம் அளித்ததாக ஏனாம் பிராந்தியத்தில் தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து அவரது ஆதரவாளா்களிடம் கேட்டதற்கு, தங்கள் முன்னிலையில் அமைச்சா் இத்தகவலை தெரிவித்ததாகக் குறிப்பிட்டனா். இதுகுறித்து தகவலறிய அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவை தொடா்பு கொண்டபோது, அவா் தொலைபேசியை எடுக்கவில்லை.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த முதல்வா் வே. நாராயணசாமியிடம், அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜிநாமா கடிதம் தந்துள்ளாரா என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, இல்லை என்று அவா் பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments