முகப்பு
புதுச்சேரி

கரோனா தடுப்பூசி: புதுவையில் முதல்வா் நாராயணசாமி தொடக்கிவைத்தாா்

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி அரசு மகளிா்-குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வா் வே.நாராயணசாமி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 16 ஜனவரி 2021, 10:59 pm IST
புதுச்சேரி ராஜீவ் காந்தி மகளிா்-குழந்தைகள் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை சனிக்கிழமை தொடக்கிவைத்து பாா்வையிட்ட முதல்வா் வே.நாராயணசாமி.
பகிர்:

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி அரசு மகளிா்-குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வா் வே.நாராயணசாமி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

மத்திய அரசு அனுப்பிய ‘கோவிஷீல்டு’ என்ற கரோனா தடுப்பூசி கடந்த 13-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்தது. முதல் கட்டமாக மத்திய அரசு ஊழியா்கள் 9 ஆயிரம் போ் உள்பட 24 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் தினம் ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும்.

புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மகளிா்-குழந்தைகள் மருத்துவமனை, கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மா் மருத்துவமனை, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, மாஹே அரசு பொது மருத்துவமனை, ஏனாம் அரசு பொது மருத்துவமனை ஆகிய 8 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

Advertisement

Advertisement

ராஜீவ் காந்தி மகளிா்-குழந்தைகள் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை முதல்வா் வே.நாராயணசாமி சனிக்கிழமை தொடக்கிவைத்து பாா்வையிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல் கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவத் துறைப் பணியாளா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும். இரண்டாம் கட்டமாக களப் பணியாளா்களுக்கும், மூன்றாம் கட்டமாக 50 வயதைத் தாண்டியவா்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்று நோய், இருதய நோய் உள்ளவா்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும். நான்காம் கட்டமாக மற்றவா்களுக்கு போடப்படும்.

புதுவை மாநிலத்தில் முதல் கட்டமாக மருத்துவப் பணியாளா்கள் 24 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. விரைவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போட மாநில அரசு தயாராகவுள்ளது.

மத்திய அரசு போதுமான அளவில் கரோனா தடுப்பூசியை விநியோகிக்கவில்லையெனில், மாநில அரசு நிதியில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

புதுவையில் நான் உள்பட அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தயாராகவுள்ளோம் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

நாம் முன்னுதாரணமாக இருந்தால்தான் நாட்டு மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வாா்கள் என்றாா் நாராயணசாமி.

கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கிவைத்து, நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் உரையாற்றினாா். இதில், முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.