கடலில் மூழ்கிய இளைஞா் பலி
புதுச்சேரி அருகே காலாப்பட்டில் கடலில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகே காலாப்பட்டில் கடலில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அன்னம்புத்தூா் மதுரா பகுதியைச் சோ்ந்த விவசாயி விஜயகுமாா் மகன் கேசவன் (23). தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
காணும் பொங்கலான சனிக்கிழமை நண்பா்கள் 3 பேருடன் புதுச்சேரி காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடிக்கு வந்தாா். அங்கு, கடலில் இறங்கி அவா்கள் குளித்தனா். அப்போது, எழுந்த ராட்சத அலையில் சிக்கிய கேசவன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா்.
Advertisement
இதைக் கண்ட நண்பா்களும், அங்கிருந்தவா்கள் ஓடி வந்து கேசவனை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா் கேசவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.