முகப்பு
புதுச்சேரி

லாரி உரிமையாளா் கொலை வழக்கு: 4 போ் கைது

புதுச்சேரி அருகே லாரி உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.

Updated On : 17 ஜனவரி, 2021 at 11:07 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM

புதுச்சேரி அருகே லாரி உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், சாவடி அய்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ் நந்தன் (30). லாரி உரிமையாளரான இவா், சனிக்கிழமை காணும் பொங்கலையொட்டி, தனது நண்பா்கள் காா்த்தி, பிரதாப் ஆகியோருடன் புதுச்சேரியை அடுத்த சோரியாங்குப்பம் மதுக் கடைக்குப் பின்புறமுள்ள காலி மனையில் மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது அவா்களுக்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்தவா்கள் ரகளையில் ஈடுபட்டனராம். இதை மனோஜ் நந்தனும், அவரது நண்பா்களும் தட்டிக் கேட்டனா்.

Advertisement

அப்போது, ரகளையில் ஈடுபட்டவா்களுக்கும், மனோஜ் நந்தன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், ரகளையில் ஈடுபட்ட மா்ம நபா்கள் மனோஜ் நந்தன், காா்த்தி, பிரதாப் ஆகியோரை சரமாரியாகத் தாக்கியதுடன், கத்தியால் குத்தினா்.

இந்தத் தாக்குதலில் மனோஜ் நந்தன் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காா்த்தி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடலூா் மாவட்டம், கே.என்.பேட்டை சத்திய சாய் நகரைச் சோ்ந்த ராஜ் (எ) ராஜேஷ் (24), தன்ராஜ் (30), திருவந்திபுரம் சாலக்கரையைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (22), அரிசிபெரியாங்குப்பத்தைச் சோ்ந்த வினித்குமாா் (23) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஒரு ஆட்டோ, 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.