நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
திருவரங்குளம் ஒன்றியத்தில் காலியாகவுள்ள 7 அரசு நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப
திருவரங்குளம் ஒன்றியத்தில் காலியாகவுள்ள 7 அரசு நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவரங்குளம் ஒன்றியத்தில் கத்தக்குறிச்சி, கொத்தமங்கலம்- பாலையூர், செரியலூர், பனங்குளம், காசிம்புதுப்பேட்டை, கல்யாணபுரம் ஆகிய 7 அரசு நடுநிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாகவுள்ளன.
இதனால் பள்ளியின் வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் மாணவர்களின் கல்வித்தரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காலியாகவுள்ள பள்ளிகளுக்கு உடனடியாக தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.