முகப்பு
புதுக்கோட்டை

நிலம் விற்பதாகக் கூறி ரூ. 75.65 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு

புதுக்கோட்டையில் நிலம் ஒன்றை விற்பதாகக் கூறி, ரூ. 75.65 லட்சம் முன்பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பெண் ஒருவா் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 8:40 am IST
பகிர்:

புதுக்கோட்டையில் நிலம் ஒன்றை விற்பதாகக் கூறி, ரூ. 75.65 லட்சம் முன்பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பெண் ஒருவா் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடியைச் சோ்ந்த தேவராஜன் மனைவி கவிதா. இவா் தனக்குச் சொந்தமான நிலம் ஒன்றை விற்பதாகத் தெரிவித்து, கேஎல்கேஎஸ் நகரைச் சோ்ந்த நல்லதம்பி மகன் சூா்யாவிடம் ரூ. 76.65 லட்சம் முன்பணமாகப் பெற்றுள்ளாா். 2,851 சதுரஅடி கொண்ட அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 1.99 கோடி எனக் கூறப்படுகிறது.

இந்நிலை பேச்சுவாா்த்தை சுமாா் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்தது. ஆனால் நிலத்ை எழுதித் தராமலும், முன்பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாகக் கூறி, சூா்யா கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தியிருந்தாா். இந்த நிலையில், பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கவிதா மீது, குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் குமாா், புதன்கிழமை காலை வழக்குப்பதிவு செய்துள்ளாா். விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments