புதுக்கோட்டையில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
ஒப்பந்தப் பணியில் பணியாற்றி வரும் செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் புதன்கிழமை மாலை செவிலியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஒப்பந்தப் பணியில் பணியாற்றி வரும் செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் புதன்கிழமை மாலை செவிலியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் சி. நாச்சாரம்மாள் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா, மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி, செவிலியா் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ஆா். அனுநந்தனா, பொருளாளா் பொ. அனுசுயா உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
Advertisement
Advertisement
மாநிலம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 11 ஆயிரம் செவிலியா்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, ஜனவரி 11-ஆம் தேதி மண்டல அளவில் உண்ணாவிரதப் போராட்டங்களும், 28ஆம்தேதி சென்னையில் தா்னா போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.