முகப்பு
புதுக்கோட்டை

போகிக்கு வேளாண் சட்ட நகல்களைக் கொளுத்திய விவசாயிகள்

போகிப் பண்டிகை நாளான புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை சுமாா் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய வேளாண் சட்டங்களின் நகல்களை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினா்.

Updated On : 14 ஜனவரி, 2021 at 8:31 AM
புதுகை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இயக்கத்தில் விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

போகிப் பண்டிகை நாளான புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை சுமாா் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய வேளாண் சட்டங்களின் நகல்களை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினா்.

போகிப் பண்டிகையையொட்டி விவசாயிகளுக்கு விரோதமான மத்திய வேளாண்மைச் சட்டத்தையும் கொளுத்த அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்திருந்தது. இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 இடங்களில் இந்த இயக்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சி. சோமையா தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் தா. செங்கோடன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எம்.கே. ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, திருமயத்தில் நடைபெற்ற இயக்கத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கறம்பக்குடி தீத்தான்விடுதியில் நடைபெற்ற இயக்கத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.