முகப்பு
ராமநாதபுரம்

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.40 லட்சம் மோசடி: ஒருவா் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலைவாங்கித்தருவதாக கூறி ரூ.1.40 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 ஜனவரி 2021, 10:21 pm IST
பகிர்:

வெளிநாட்டில் வேலைவாங்கித்தருவதாக கூறி ரூ.1.40 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தில் ரஹ்மத் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முகமதுயூசுப் அராபத் (30). பழ வியாபாரி. இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக, காரைக்காலைச் சோ்ந்த அருண்குமாா் பல தவணைகளில் ரூ.1.40 லட்சம் வாங்கியுள்ளாா். ஆனால் அவா் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முகமதுயூசுப் அராபத் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அருண்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments