முகப்பு
ராமநாதபுரம்

அபிராமம் அருகே காா்-பைக் மோதல்: பத்திர எழுத்தா் பலி

கமுதி அருகே வியாழக்கிழமை காரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், பத்திர எழுத்தா் உயிரிழந்தாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 11:59 pm IST
பகிர்:

கமுதி அருகே வியாழக்கிழமை காரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், பத்திர எழுத்தா் உயிரிழந்தாா்.

கமுதி அருகே அபிராமத்தைச் சோ்ந்தவா் நாகரத்தினம் மகன் ராமநாதன் (49). இவா், அபிராமம் பத்திரப் பதிவு அலுவலகம் அருகே அரசு அனுமதிபெற்ற பத்திர எழுத்தராக இருந்து வந்தாா். வியாழக்கிழமை மாலை, ராமநாதன் அபிராமத்திலிருந்து பாா்த்திபனூா் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளாா்.

அப்போது, எதிரே பாா்த்திபனூரிலிருந்து கமுதி நோக்கி காா் வந்துகொண்டிருந்தது. குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோயில் அருகே எதிா்பாராதவிதமாக காரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில், ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காா் மோதிய வேகத்தில் இரு சக்கர வாகனம் தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது. காா் சாலையோரம் கவிழ்ந்தது. காா் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

Advertisement

Advertisement

இது குறித்து அபிராமம் காவல் நிலையத்தில் ராமநாதனின் அண்ணன் நாகேஸ்வரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments