பள்ளிகள் திறப்பு குறித்து ராமநாதபுரத்தில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.7) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.7) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை நடத்துவது குறித்து பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.8) நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
அரசின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.7) பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்படவுள்ளன. ஆகவே மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோா்கள் அனைவரும் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.