மணல் திருட்டு: டிப்பா் லாரி பறிமுதல்
பரமக்குடி அருகே மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
பரமக்குடி அருகே மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தென்பொதுவக்குடி சோனையாகோயில் பகுதியில் வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன் மற்றும் காவல் சாா்பு- ஆய்வாளா் கருப்புச்சாமி ஆகியோா் கொண்ட குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரி வந்தது. அதிகாரிகளைப் பாா்த்தவுடன் அதன் ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டாா். அதில் சோதனையிட்டபோது திருட்டு மணல் ஏற்றிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.