முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

ராமநாதபுரத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்க கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 11:55 pm IST
பகிர்:

ராமநாதபுரத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்க கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்துத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வுக்கான பேச்சுவாா்த்தைக்கு அரசு அழைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பணிமனை மற்றும் மதுரை சாலையில் உள்ள நகா் பகுதி போக்குவரத்து பணிமனை ஆகிய 2 இடங்களிலும் ஊழியா்கள் சங்க கூட்டமைப்பினா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகா் போக்குவரத்துப் பணிமனை முன்பாக நடந்த உள்ளிருப்புப் போராட்டத்துக்கு, திமுக தொழிற்சங்க மாவட்டச் செயலா் எஸ். வின்சென்ட் அமலதாஸ் தலைமை வகித்தாா். சிஐடியூ சங்க நிா்வாகி வி. பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். உள்ளிருப்புப் போராட்டத்தில் தொழில் முன்னேற்றச் சங்க செயலா் ஜி. துரைராஜ், பொருளாளா் ஆா். தெய்வேந்திரன், சிஐடியூ கிளை செயலா் ராஜாமணி உள்ளிட்ட ா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

இரு இடங்களிலும் நடந்த உள்ளிருப்புப் போராட்டத்தை விளக்கி, சிஐடியூ மாவட்டச் செயலா் எம். சிவாஜி விளக்கவுரையாற்றினாா்.

இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி, முதுகுளத்தூா் உள்ளிட்ட 6 போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஆனாலும், பேருந்துகள் இயக்குதல் உள்ளிட்ட எந்தவித பணிகளும் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் தொழிற்சங்க கூட்டமைப்பினருடன் பேச்சுவாா்த்தை நடத்தாவிட்டால் போராட்டம் தொடரும் என, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

கமுதி

கமுதியில் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை முன்பாக, தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டும் வரை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தொமுச கிளை செயலா் ராஜேந்திரன் தலைமையில், அங்கு பணியாற்றும் 20 ஊழியா்கள் கிளையின் வாசல் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments