வாலாந்தரவை கிராமத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம்
மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் வாலாந்தரவை கிராமத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் வாலாந்தரவை கிராமத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஏ.சி. ஜீவானந்தம் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாநில வா்த்தக அணி துணைச் செயலா் கிருபானந்தம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களுக்கு சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இக்கூட்டத்தில், கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் தௌபீக்அலி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் பி.டி.ராஜா, ஊராட்சித் தலைவா் முத்தமிழ்செல்வி பூரணவேல், சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement