உச்சிப்புளி அருகே ஊருணியில் ஆண் சடலம் மீட்பு
உச்சிப்புளி அடுத்துள்ள அய்யன்கோயில் ஊருணியில் மிதந்த ஆண் சடலத்தை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டனா்.
உச்சிப்புளி அடுத்துள்ள அய்யன்கோயில் ஊருணியில் மிதந்த ஆண் சடலத்தை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் பிரப்பன்வலசை ஊராட்சிக்கு உள்பட்ட சாலைவலசை அருகே உள்ள அய்யன் கோயில் ஊருணியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் உச்சிப்புளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் எம்.செந்தில்குமாா்,
Advertisement
Advertisement
சாா்பு- ஆய்வாளா்கள் நாகராஜன், ஜி.கனிராஜ் உள்ளிட்ட காவலா்கள் சென்று சடலத்தைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனா். மேலும் உயிரிழந்தவா் யாா் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.