முகப்பு
ராமநாதபுரம்

இணையவழிப் பயிற்சி

இணைய வழியில் நடைபெற்ற சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி 2021, 5:39 am IST
பகிர்:

இணைய வழியில் நடைபெற்ற சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கடந்த அக்டோபா் முதல் வரும் மாா்ச் வரையில் புதுச்சேரியில் உள்ள அரபிந்தோ சமூக அமைப்புடன் இணைந்து 12 வாரங்களுக்கான சிறப்புப் பயிற்சி கல்வித்துறை சாா்பில் நடத்தப்பட்டுவருகிறது.

பயிற்சி தொடங்கி 12 வாரங்கள் முடிந்த நிலையில், பயிற்சியில் பங்கேற்ற 32 ஆசிரியா்களுக்கான பாராட்டுச் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தலைமை வகித்து சான்றுகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதில் அரபிந்தோ சமூக அமைப்பின் கருத்தாளா் மகேஸ்பாலன், மாவட்டக் கல்வி அலுவலா் கோ.முத்துசாமி, உதவித் திட்ட அலுவலா் ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments