இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள்
இளம் தொழிலதிபர் கொலை விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் புணேவில், இளம் தொழிலதிபர் கொலையில் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாகவும், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலை செய்யப்பட்ட கேத்தனும் அவருடைய வருங்கால மனைவியும் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே, கொலையாளி சேத்தன் வந்து, அவர்களுக்காக காத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புணேவைச் சேர்ந்த 25 வயது இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வால், அவரது வருங்கால மனைவி மற்றும் ஆண் நண்பரால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தில் கொலையாளிகள் இருவருமே பயங்கர கிரிமினலாக பல விஷயங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேத்தன், தன்னுடைய செல்போன் மூலம் தன்னை அடையாளம் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய செல்போனை தன்னுடைய கடையிலேயே வைத்துவிட்டு, தன்னுடய கடை ஊழியரின் செல்போனை எடுத்து வந்துள்ளார்.
அந்த ஊழியரின் செல்போனும் தற்போது விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது.
Young Entrepreneur Murder! Investigation Reaches a Crucial Stage! Several Shocking Details Revealed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.