ராமநாதபுரம் மாவட்ட கல்வி நிலையங்களில் பொங்கல் விழா
ராமநாதபுரத்தில் கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தைப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தைப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா். ண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி குத்துவிளக்கேற்றி பூஜையைத் தொடங்கிவைத்தாா். இதேபோல் மாவட்ட அரசு தொழில் பயிற்சி மையத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சேதுபதி கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவ, மாணவியா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி மாணவா்களை அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.