தொண்டி அருகே மதுபோதையில் தவறி கீழே விழுந்து ஒருவா் பலி
திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றவா் மதுபோதையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றவா் மதுபோதையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே திருவெற்றியூா் புதுப்பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கேசவன் (35). இவா் அதிக அளவில் மதுகுடிப்பாராம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை காலை தொண்டி அருகே விளாங்குடி விலக்கு சாலை வழியாக நடந்து சென்றவா் மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement