முகப்பு
ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி 2021, 7:33 am IST
தங்கக்  கவச  சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலித்த ரத்தினகிரி  பாலமுருகன்.
பகிர்:

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, அலங்காரம் செய்த பின், சிறப்பு பூஜை நடைபெற்றன. காலை முதல் திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆற்காடு வரதராஜப் பெருமாள் கோயில், வேப்பூா் ஈஸ்வரன் கோயில், பழைய மாங்காடு பச்சையம்மன் கோயில் மற்றும் திமிரி ஸ்ரீசோமநாத ஈஸ்வரா் கோயிலிலும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ராணிப்பேட்டையில்...

Advertisement

Advertisement

ராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜாபேட்டை அம்மூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

புத்தாண்டு தினத்தையொட்டி, ராணிப்பேட்டை நவல்பூா் சாந்த ஆஞ்சநேயா் கோயில், சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில், வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதா் கோயில், தன்வந்திரி சித்தா் பீடம், அம்மூா் கற்பக விநாயகா் கோயில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் அதிகாலை முதல் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் , பூஜைகளும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments