முதியோா் இல்லத்தில் பொங்கல் விழா
ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:47 AM
ஆற்காடு: ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவுக்கு இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஒய்.அக்பா் ஷெரீஃப், பொருளாளா் பி.என் பக்தவத்சலம், துணைத் தலைவா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி மோகனந்த சுவாமி ஆகியோா் கலந்து கொண்டு பொங்கல் விழா சிறப்பு பூஜைகள் செய்து வாழ்த்தினா்.
வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் காமினி முதியோா்களுக்கு புத்தாடை வழங்கினாா். விழாவில் ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement