காளஹஸ்தி கோயிலில் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்
திருப்பகதியை அடுத்த காளஹஸ்தியில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருப்பகதியை அடுத்த காளஹஸ்தியில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் இதர தேவைகளுக்காக பசு மாடுகளுடன் கோசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து பெறப்படும் பால் கோயில் பூஜைகள், பிரசாதங்கள் மற்றும் நெய் தயாரிப்புக்கும் அபிஷேகங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேவைகள் போக, மீதமாகும் பாலை கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கும், சிறுவா்களுக்கும் இலவசமாக வழங்க கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
இக்கோயிலில் முதல் முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.