முகப்பு
ஆன்மிகம்

ஸ்ரீஆண்டாளுக்கு ஸ்ரீகள்ளழகர் டாலருடன் கூடிய செயின்: நடனக் கலைஞர் உபயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் அணிந்து கொள்வதற்காக ரூ.5 லட்சம் மதிப்பில் 20 பவுன் எடையுள்ள ஸ்ரீகள்ளழகர் டாலருடன் கூடிய செயின் வியாழக்கிழமை உபயமாக வழங்கப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட், 2013 at 1:19 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் அணிந்து கொள்வதற்காக ரூ.5 லட்சம் மதிப்பில் 20 பவுன் எடையுள்ள ஸ்ரீகள்ளழகர் டாலருடன் கூடிய செயின் வியாழக்கிழமை உபயமாக வழங்கப்பட்டது.

இதனை உபயமாக வழங்கிய சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வந்துகொண்டிருக்கிறேன். ஸ்ரீஆண்டாளுக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் டாலருடன் கூடிய செயின், திருப்பதி திருவேங்கடமுடையான் டாலருடன் கூடிய செயின் தற்போது உள்ளது. ஆனால், மதுரை கள்ளழகர் டாலர் செயின் மட்டும் இல்லை என்று பட்டாச்சாரியார் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

அவர் கூறியதை, ஸ்ரீஆண்டாள் கூறியதாகவே ஏற்றுக்கொண்டு, ஸ்ரீகள்ளழகர் டாலருடன் கூடிய ரூ.5 லட்சம் மதிப்பிலான 20 பவுன் செயினை உபயமாக வழங்கியுள்ளேன் என்றார் ஜாகீர் உசேன். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ரீஆண்டாளை 24 நான்கு மணி நேரமும் நினைத்து வாழ்வதாகவும் தெரிவித்தார் ஜாகீர் உசேன்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.