ராமானுஜர் கோயிலில் திருவாதிரை அபிஷேகம்
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள ஸ்ரீராமானுஜர் கோயிலில் திருவாதிரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள ஸ்ரீராமானுஜர் கோயிலில் திருவாதிரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டிலிருந்து ஓரிக்கை கிராமத்துக்குச் செல்லும் சாலையில் ஸ்ரீராமானுஜர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீராமானுஜருக்கு விஷேச அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறும்.
Advertisement
இந்நிலையில் சனிக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமானுஜரை தரிசித்தனர்.