FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

துவாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துவாதசியையொட்டி இன்று தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துவாதசியையொட்டி இன்று தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. 

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.05 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

சொர்க்கவாசல் திறந்து ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்தியாக சொர்க்கவாசலில் ஏழுந்தருளினார். அதன்பின் காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நேற்று காலை 9 மணியளவில் மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Advertisement

Advertisement

அதனைதொடர்ந்து இன்று துவாதசியையொட்டி கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments