முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள் எது தெரியுமா?
இந்து சமயக் கடவுள்களில் ஒருவரும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவருமான முருகப் பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள் எது என்று தெரிந்துகொள்வோம்.
இந்து சமயக் கடவுள்களில் ஒருவரும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவருமான முருகப் பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள் எது என்று தெரிந்துகொள்வோம்.
* கந்த புராணம் - இது ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் உணர்ந்து அனுபவிக்க வேண்டியது. கச்சியப்பரால் இயற்றப்பட்டது.
* திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது.
Advertisement
Advertisement
* திருப்புகழ் - முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல் ஆகும்.
* கந்தர் அநுபூதி - அருணகிரிநாத சுவாமிகள் அருளியது கந்தர் அநுபூதி.
* கந்தசஷ்டி கவசம் - பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
* கந்த குரு கவசம் - ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கவசம் இது.
* வேல் விருத்தம் - முருகப் பெருமானின் கை வேலின் புகழ் கூறுவதை மையமாக வைத்து அருணகிரிநாதர் பாடியதாகும்.
* மயில் விருத்தம் - அருணகிரிநாதர் இயற்றியது இந்நூல்.
* ஷண்முக கவசம் - ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியது.
* கந்தர் கலிவெண்பா - திருச்செந்தூர் முருகனைக் குறித்துப் பாடப்பட்ட ஒரு நூலாகும். இதனைப் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றினார்.
* கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும்.