முகப்பு
செய்திகள்

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: சுவாமி தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு

தொடர் விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

தொடர் விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இலவச தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 

வைகுண்டம் காம்ப்ளக்க்ஸ இருக்கும் 64 அறையிலும் நிரம்பியுள்ளதால், இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

அதேபோன்று, ரூ.300 சிறப்புக் கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பக்தர்கள் கூட்டம் நிரம்பி வருவதால் லட்டு பிரசாதத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

மேலும், கூட்டம் அதிகரித்துள்ளதால் விஐபி தரிசனங்கள் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →