மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி புதுமண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும் உலகப்புகழ் பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான வைகாசி வசந்த உற்சவ விழா 21ம் தேதி தொடங்கி வரும் 30 -ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement