முகப்பு
சேலம்

சுவர் இடிந்து விழுந்து காயமடைந்த பெண் சாவு

சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்

Updated On : 11 மே, 2013 at 12:18 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோலாத்துக்கொம்பை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பூங்கா (36). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் சேகோ ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த புதன்கிழமை ஆலையின் சுவர் இடிந்து பூங்கா மீது விழுந்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

Advertisement

அங்கு, அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வீராணம் போலீஸார், ஆலையின் உரிமையாளர் குமரவேலைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.