முகப்பு
சேலம்

சேலத்தில் 7 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது

சேலம் அன்னதானப்பட்டியில் முன்விரோதம் காரணமாக, 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினர்

Updated On : 11 மே 2013, 12:16 pm IST
பகிர்:

சேலம் அன்னதானப்பட்டியில் முன்விரோதம் காரணமாக, 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சேலத்தை அடுத்த கருப்பூர் வட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம்.பாபு (38). கொலை, நகைப் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்.

இவருக்கும், தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த மற்றொரு கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக சென்ற பாபு, இவரது தந்தை மாது உள்ளிட்ட 6 பேர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகியோரை ஒரு கும்பல் கடந்த 8-ஆம் தேதி அரிவாளால் வெட்டியது.

இதில், பலத்த காயம் அடைந்த அனைவரும் சேலம் அரசு அதிநவீன மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அன்னதானப்பட்டி காவல் துறையினர், வளத்தி குமார் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர்.

மேலும் சிலர் தருமபுரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சேலம் சண்முக நகரைச் சேர்ந்த கே.மோகன் (32), தருமபுரி, செட்டிக்கரையைச் சேர்ந்த என்.சிவா (31) ஆகிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.